புரவங்கரா நிறுவனம் தனது காலாண்டு நிதி நிலை அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், நிறுவனத்தின் வருவாய் 513கோடியாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரவங்கரா நிறுவனம், தனது வரலாற்றில் உச்சபட்ச விற்பனை நிகழ்வை, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவு செய்துள்ளது. காலாண்டு நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு: சுமார் 513 கோடி ரூபாய் மதிப்பிலான 0.69 மில்லியன் ஸ்கொயர் பீட் இடத்தை நிறுவனம் விற்பனை செய்துள்ளது. வரிக்குப் பின்னான லாபம் 35 கோடியாக உள்ளது. இது முந்தைய காலாண்டை விட 258% கூடுதலாகும். மேலும், செயல்பாட்டில் உள்ள திட்டமதிப்பு 667 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய காலாண்டை விட 16% கூடுதலாகும். மேலும், விற்பனை செய்யப்பட்ட இடத்தின் அளவு கடந்த ஆண்டை விட 64% அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் 297 கோடியாக உள்ளது. EBITDA மார்ஜின் 47 சதவீதத்தில் 139 கோடியாக உள்ளது. வரிக்குப் பின்னான நிகர லாபம் 48 கோடியாகவும் வரிக்கு முன்னான நிகரலாபம் 35 கோடியாகவும் இருக்கிறது. அதே நேரத்தில், நிறுவனத்தின் நிகர கடன் மதிப்பு 1889 கோடியாக உள்ளது. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ் புரவங்கரா, "இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், எங்கள் நிறுவனம் நல்ல முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் வரலாற்றில் உச்சகட்ட லாபம் இம்முறை பதிவாகியுள்ளது. பணவீக்கச் சூழ்நிலை நீடித்த போதிலும் நல்ல லாபத்தை ஈட்டி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசாங்க உதவிகள், மக்களின் வீடு வாங்கும் மனப்போக்கு மற்றும் சாதகமான சூழல் போன்றவற்றாலேயே இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது. இனி வருங்காலங்களிலும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாங்கள் இந்தத் துறையில் மேலும் முன்னேற்றம் அடைவோம் என்று நம்புகிறோம்" என்று கூறினார்.