தமிழ்நாட்டின் 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை அறிமுகம்

January 12, 2023

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி இணைய சேவை தமிழ்நாட்டின் 6 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை வழங்கப்படுகிறது. மேலும், இதன் மூலம், நாடு தழுவிய முறையில், ஜியோ நிறுவனத்தின் 5ஜி இணைய சேவை பெற்ற நகரங்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து பேசிய […]

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ட்ரூ 5ஜி இணைய சேவை தமிழ்நாட்டின் 6 முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை வழங்கப்படுகிறது. மேலும், இதன் மூலம், நாடு தழுவிய முறையில், ஜியோ நிறுவனத்தின் 5ஜி இணைய சேவை பெற்ற நகரங்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து பேசிய ஜியோ செய்தி தொடர்பாளர், “தமிழ்நாட்டில் 5ஜி இணைய சேவை கொண்டு வருவதற்காக 40000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு லட்சம் தமிழர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5ஜி சேவை விரிவாக்கப்படும். தற்போதைய நிலையில், ஜியோ 5ஜி அறிமுகச் சலுகை மேற்குறிப்பிட்ட 6 நகரவாசிகளுக்கும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu