மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்கப்படவுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் மற்றும் இலங்கை, துபாய், சிங்கப்பூரிலிருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. தற்போது இரவு 8:40 மணி வரை விமானங்கள் இயக்கப்படுகின்றன. இரவிலும் உள்நாட்டு விமான சேவையுடன் கூடுதலாக வெளிநாட்டு விமான சேவைகள் துவக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது
இதைத்தொடர்ந்து 24 மணி நேர விமான வான் போக்குவரத்து கட்டுப்பாடு, வலைதள தொடர்பு சேவை ஆகிய பிரிவுகளில் ஆட்கள் நியமனம் செய்வதும், விமான நிலைய பாதுகாப்பு பணி இடங்கள் நிரப்புதல் ஆகியவை குறித்தும் ஒப்புதல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏப்ரல் 1 முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேரம் பயண சேவை தொடங்குகிறது.