பாகிஸ்தானில் உள்ள கில்ஜித் பலுசிஸ்தான் பகுதி, முன்னதாக இந்தியாவில் இருந்தது. இது தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள், தாங்கள் மீண்டும் இந்தியாவுடன் இணைய விரும்புவதாக கூறி தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தும் இந்த போராட்டம் தற்போது கவனம் பெற்றுள்ளது. மேலும், கில்ஜித் பலுசிஸ்தான் மக்கள், சமூக வலைதளங்களில், பாகிஸ்தானை எதிர்த்தும் இந்தியாவை ஆதரித்தும் பதிவுகள் இட்டு வருகின்றனர்.
ஸ்கார்டு என்ற நகரத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கார்கில் சாலையில் உள்ள தடுப்புகளை பாகிஸ்தான் அகற்ற வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் நெடுங்காலமாக காஷ்மீர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்து வந்ததாகவும், பல்திஸ் இன மக்கள் தற்போதும் லடாக்கில் வசித்து வருவதையும் சுட்டிக்காட்டி அவர்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவதாக கூறுகின்றனர். அத்துடன், பாகிஸ்தான் தங்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவர்களின் நிலங்களை பாகிஸ்தான் ராணுவம் அபகரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.