விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய பல்வேறு முயற்சிகளை விஞ்ஞானிகள் எடுத்து வருகின்றனர். அதன் பகுதியாக, வேற்றுலக ரேடியோ சிக்னல்கள் கிடைக்கின்றனவா? என்ற ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, தொலைவில் உள்ள பால்வீதி மண்டலத்தில் இருந்து மர்மமான ரேடியோ சிக்னல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அதிக அளவிலான வேற்றுலக ரேடியோ அலைகளை கனடாவின் ரேடியோ தொலைநோக்கி கண்டறிந்த நிலையில், கனடாவின் மெக் கில் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து ராட்சச அளவிலான ரேடியோ தொலைநோக்கி மூலம் புதிய ரேடியோ சிக்னல்களை கண்டறிந்துள்ளன. இந்த ராட்சச தொலைநோக்கிகள் இந்தியாவின் புனே பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தி ராயல் அஸ்ட்ரானமிக்கல் சொசைட்டி என்ற இதழில் இது குறித்த விரிவான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரேடியோ சிக்னல்கள் 8.8 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ரேடியோ சிக்னல்கள் கிடைத்துள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் பெருமகிழ்ச்சியை மற்றும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.