மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி

January 24, 2023

மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மீனவர்கள் தரப்பில், மாநில அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்ல தங்களுக்கு கடலில் தனிவழி அமைத்துக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றனர். இதையடுத்து திங்கள்கிழமை மற்றும் […]

மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

12 கடல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகள் மூலம் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கோரி மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது மீனவர்கள் தரப்பில், மாநில அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டை மடி வலைகளை ஆழ்கடலுக்கு எடுத்துச்செல்ல தங்களுக்கு கடலில் தனிவழி அமைத்துக் கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றனர்.

இதையடுத்து திங்கள்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் மட்டும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். சுருக்குமடி வலையுடன் காலை 8 மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்குள் மீனவர்கள் திரும்பவேண்டும். சுருக்குமடி வலையை பயன்படுத்த பதிவு செய்த படகுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu