யாஹூ நிறுவனம் தனது மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 20 சதவீதத்தினரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையாக இந்த பணி நீக்கம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்ப பிரிவில் உள்ள பணியாளர்கள் நீக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பிரிவை சேர்ந்த 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிப்படைவர். அத்துடன், இந்த வாரத்திலேயே கிட்டத்தட்ட 1000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக, விளம்பரதாரர்கள் தங்களது பங்களிப்பை குறைத்துக் கொண்டுள்ளனர். எனவே, தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் பணிநீக்கங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வரிசையில், யாஹூ தளத்தை இயக்கி வரும் அப்போலோ குளோபல் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.