இத்தாலிய தலைவர் மெலோனியா வெளியிட்ட சர்ச்சை வீடியோ பதிவை டுவிட்டர் நீக்கியது.
இத்தாலியின் அடுத்த பிரதம மந்திரிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் ஜியோர்ஜியா மெலோனியா உக்ரேனிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டார் . அது பெ௫ம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் அந்த வீடியோவை ட்விட்டர் நீக்கியது. இதைத் தொடர்ந்து மெலோனி தனது ட்விட்டரில், "பாதிக்கப்பட்டவ௫க்கு நீதியை பெற்றுத்த௫வதற்காக இந்த வீடியோவை வெளியிட்டதாகக் கூறினார். ஆனால் மெலோனியின் இந்த வீடியோ பதிவை அவரின் அரசியல் போட்டியாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் செய்தனர். மேலும் அவர் பாதிக்கப்பட்டவரின் அனுமதியின்றி இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டினர். அத்துடன் டுவிட்டரானது சர்ச்சைக்குரிய இந்த பதிவை நீக்கிவிட்டு "இந்த ட்வீட் ட்விட்டர் விதிகளை மீறியுள்ளது." என்று மறுபதிவிட்டது . 55 வயதுடைய உக்ரேனியப் பெண் கினியாவைச் சேர்ந்த ஒ௫வரால் கற்பழிக்கப்பட்டதாக பியாசென்சா நகரின் அதிகாரிகள் கூறுகின்றனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார், விசாரணை நடந்து வருவதால், அந்த நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வீடியோ எப்படி வெளியானது என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருவதாக வழக்கறிஞர் கிராசியா பிரடெல்லா கூறினார்.