இன்று பூமியை நெருங்கும் 226 அடி விண்கல் - நாசா எச்சரிக்கை

February 18, 2023

இன்று சுமார் 226 அடி அகலம் உடைய விண்கல் ஒன்று, பூமியை மிகக் குறைவான தூரத்தில் நெருங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, இது குறித்து அபாயகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஒருவேளை இந்த விண்கல் பூமியின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டால், மிகப்பெரிய பேரழிவு நிகழும் என்று தெரிவித்துள்ளது. 2023 சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், ஜனவரி 25ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விண்கல், மணிக்கு 43776 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை […]

இன்று சுமார் 226 அடி அகலம் உடைய விண்கல் ஒன்று, பூமியை மிகக் குறைவான தூரத்தில் நெருங்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, இது குறித்து அபாயகரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஒருவேளை இந்த விண்கல் பூமியின் புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டால், மிகப்பெரிய பேரழிவு நிகழும் என்று தெரிவித்துள்ளது.

2023 சிசி 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், ஜனவரி 25ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விண்கல், மணிக்கு 43776 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருகிறது. மேலும், இது 5.7 மில்லியன் கிலோமீட்டர் தூரம் அளவிற்கு பூமிக்கு மிக நெருக்கமாக வரவுள்ளது. இந்நிலையில், இந்த விண்கல்லால், தற்போதைய நிலையில் பூமிக்கு எந்தவித ஆபத்தும் நேராது என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கல், பாதுகாப்பு விளிம்பை தாண்டியே பூமியை கடக்க உள்ளதால் ஆபத்து இல்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu