தென் ஆப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகள் இந்தியா வருகை

February 18, 2023

பிரதமர் நரேந்திர மோடி, ‘சீட்டா’ என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவில் அழிந்து விட்டதாக கருதப்படும் சிவிங்கிப் புலிகளை ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, ஏற்கனவே, 8 புலிகள் வரவழைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக, 12 சிவிங்கி புலிகள் குவாலியர் விமான நிலையத்தை வந்தடைந்தன. இதுகுறித்து பேசிய ‘சீட்டா’ திட்டத்தின் தலைவர் எஸ் பி யாதவ், “தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்திலிருந்து, இரவு 8:30 மணிக்கு, இந்திய விமானப்படையின் சி 17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில், […]

பிரதமர் நரேந்திர மோடி, ‘சீட்டா’ என்ற திட்டத்தின் மூலம், இந்தியாவில் அழிந்து விட்டதாக கருதப்படும் சிவிங்கிப் புலிகளை ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி, ஏற்கனவே, 8 புலிகள் வரவழைக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக, 12 சிவிங்கி புலிகள் குவாலியர் விமான நிலையத்தை வந்தடைந்தன. இதுகுறித்து பேசிய ‘சீட்டா’ திட்டத்தின் தலைவர் எஸ் பி யாதவ், “தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் விமான நிலையத்திலிருந்து, இரவு 8:30 மணிக்கு, இந்திய விமானப்படையின் சி 17 க்ளோப்மாஸ்டர் விமானத்தில், 12 புலிகள் கிளம்பின. அவை, சனிக்கிழமை காலை 10 மணிக்கு மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமான நிலையத்திற்கு வந்தடைந்தன. அவை, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, மத்திய பிரதேசத்தின் குனோ பூங்காவில் விடப்படும்” என்று கூறினார்.

இந்த முறை 7 ஆண் புலிகளும், 5பெண் புலிகளும் வந்தடைந்துள்ளன. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் மற்றும் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகான் ஆகியோர் இவற்றை குனோ பூங்காவில் திறந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகள் மொத்த எண்ணிக்கை 20 ஆக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu