4 புதிய வடிவமைப்பில் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிப்பு 

February 20, 2023

4 புதிய வடிவமைப்பில் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்படுவதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை புதுடெல்லி - வாரணாசி இடையே 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுவரை 10 ‘வந்தே பாரத்’ரயில்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கி 4 ஆண்டுகள் அண்மையில் நிறைவடைந்தது. இதையொட்டி ‘வந்தே பாரத்’ ரயில்களை 4 புதுவகையான வடிவமைப்புடன் தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் […]

4 புதிய வடிவமைப்பில் ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்படுவதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘வந்தே பாரத்’ ரயில் சேவையை புதுடெல்லி - வாரணாசி இடையே 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதுவரை 10 ‘வந்தே பாரத்’ரயில்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவை தொடங்கி 4 ஆண்டுகள் அண்மையில் நிறைவடைந்தது. இதையொட்டி ‘வந்தே பாரத்’ ரயில்களை 4 புதுவகையான வடிவமைப்புடன் தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறுகையில், நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. தூங்கும் வசதி கொண்ட ரயில், பார்சல் ரயில், மெட்ரோ மற்றும் புறநகர் மின்சார வந்தே பாரத் ரயில் என 4 புது வடிவமைப்புகளில் படிப்படியாக தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயிலை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu