இந்தியாவின், நிலவு குறித்த ஆராய்ச்சியின் அடுத்த கட்டமாக, சந்திரயான் 3 திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான கிரோஜினிக் இன்ஜினை இஸ்ரோ சோதனை செய்தது. மேலும், இந்த பரிசோதனை வெற்றி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி, தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில், சுமார் 25 வினாடிகளுக்கு முக்கிய என்ஜின் பரிசோதனை நிகழ்த்தப்பட்டது. மேலும், இந்த சோதனையில் அனைத்து நிலைகளிலும் எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. எனவே, விரைவில், இந்த கிரையோஜெனிக் என்ஜின் ப்ரபெல்லன்ட் டாங்குகளுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர், அடுத்த கட்ட சோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சந்திரயான் 3 திட்டத்திற்கான லேன்டர் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியது. அதை தொடர்ந்து, மின்காந்த அலை சார்ந்த சோதனை நடத்தப்பட்டு வெற்றியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சந்திரயான் 3 திட்டத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.