ஜுராசிக் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் பூச்சி ஒன்றின் படிமத்தை, வால்மார்க் கட்டிடத்தின் வெளிப்பகுதியில், விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த பூச்சி இனம், 1950 களில் வட அமெரிக்காவில் அழிந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால், விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. எனவே, மலைப்பகுதிகளில் இந்த பூச்சி இனம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ராட்சச பூச்சி இனம், டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் அதிக அளவில் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வால்மார்ட் கட்டிடத்தில், கடந்த 2012 ஆம் ஆண்டு, மைக்கேல் ஸ்க்வர்லா என்ற நபர் இந்த பூச்சியை கண்டுபிடித்துள்ளார். பூச்சிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தில் பணிபுரியும் அவர், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து, இந்த பூச்சி தொடர்பான ஆராய்ச்சியில் புதிய தகவல்கள் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது.