பைஜூஸ் கல்வி நிறுவனத்திற்கு கீழ் ஆகாஷ் கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஆகாஷ் நிறுவனத்தின் ஐபிஓ விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம், 250 மில்லியன் டாலர் நிதியை திரட்ட பைஜூஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, 20% சலுகையில், மாற்றத்தக்க முறையில், ஆகாஷ் நிறுவனத்தின் ஐபிஓ நிதி பைஜூஸ் நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு ஐபிஓ வெளியாகும் முன்னரே, பைஜூஸ் அதிகாரிகள் அரங்கில், இந்த பரிவர்த்தனை நிகழ்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.
பைஜூஸ் நிறுவனம், கடும் நிதிச் சுமையில் இயங்கி வருகிறது. எனவே, நிறுவனத்தை லாபகரமான பாதையில் இட்டுச் செல்ல இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆகாஷ் ஐபிஓ வுக்கு முன்னதாக, பைஜூஸ் அதிகாரிகள் பங்கேற்கும் முதல் சுற்று ஐபிஓ நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.