பிரபல பயணிகள் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், இந்தியாவில் தனது கட்டமைப்பை உருவாக்க உள்ளது. 737 பயணிகள் விமானங்களை சரக்கு விமானங்களாக மாற்றும் திட்டத்திற்காக இந்த கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஹைதராபாத்தில் இதற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டத்திற்காக, ஜி எம் ஆர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக போயிங் அறிவித்துள்ளது. விமானங்களை பராமரித்தல், அதில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்தல் மற்றும் பயணிகள் விமானங்களை சரக்கு விமானங்களாக மாற்றுதல் ஆகிய நடவடிக்கைகள் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.