நாட்டு நாட்டு என்ற இந்திய பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த பாடல் பிரிவில் இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் இந்திய திரைப்படத்தின் நாட்டு, நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குளோபல் விருதை தட்டி சென்றிருந்தது. கீரவானி என்ற இசை அமைப்பாளர் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த பாடலும் , காட்சியும் ஒளிபரப்பப்பட்டது. 2009 ல் ஜெய்ஹோ என்ற ஏஆர் ரகுமான் இசையமைத்த பாடலுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.