அமெரிக்காவின் SVB வங்கி திவாலாகி இருப்பது, இந்திய நிதித்துறை கட்டமைப்பை பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரக்காவின் கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு செயல்பட்ட சிலிகான் வேல்லி பேங்க்(SVB) திவாலானதை அடுத்து அந்த வங்கி கடந்த 10ம் தேதி மூடப்பட்டது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்குவதை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த வங்கி, கடந்த 2008ம் ஆண்டில் இருந்தே நிதி நெருக்கடியில் சிக்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இது இந்திய நிதிச் சந்தையை பாதிக்குமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர், SVB வங்கி திவாலானதால் இந்திய நிதிச் சந்தை பெரிய பாதிப்புகள் எதையும் எதிர்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் வங்கிகள் மற்றம் நிதி நிறுவனங்கள் மீதான கண்காணிப்பு வலிமையாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என கணிக்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவன சந்தையில் அதன் தாக்கம் இருக்கும் என்று மத்திய அரசின் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.