தமிழகம், புதுச்சேரியில் இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று (மார்ச் 14) தொடங்கி ஏப்.5-ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரியில் 3,224 மையங்களில் 7.93 லட்சம் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதுகின்றனர். முதல் நாளான இன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 43,200 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர், வருவாய் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.