தமிழகத்தில் தினசரி மின்தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மத்திய தொகுப்பில் இருந்து 5,800 மெகாவாட், சூரியசக்தி, அனல் மின்நிலையங்களில் இருந்து தலா 3,800 மெகாவாட் மின்சாரம் மூலமாக இந்த மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. கோடை காலத்தின் தொடக்கத்திலேயே தினசரி மின்தேவை 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டிய நிலையில் வரும் நாட்களில் தினசரி மின்தேவை 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் நாட்களில் மின்வாரியம் தனது அனல்மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், சூரியசக்தி, காற்றாலைகள் மற்றும் மத்திய மின்தொகுப்பு ஆகியவற்றில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். இவை தவிர தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.