நிலவின் மறுபக்கத்தில் லேண்டர் ஒன்றை கொண்டு செல்லும் திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டு அனுப்பப்படவுள்ள இந்த லேண்டரை தயாரிக்க, பயர்ப்ளை ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்துள்ளது. அதன்படி, நிறுவனத்துடன் 112 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் நாசா கையெழுத்திட்டுள்ளது.
நாசாவின் இந்த ஒப்பந்தத்தின் படி, பயர்ப்ளை ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2 முக்கிய சுமை பாகங்களை உருவாக்கித் தரும். மேலும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்துடன் இணைந்து, லேண்டரில் இருந்து நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டருக்கு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உருவாக்க பணியாற்றும். மேலும், இந்த திட்டம் ஆர்டெமிஸ் திட்டத்தின் பகுதியாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன்னர், நிலவைக் குறித்த முக்கிய ஆராய்ச்சி செய்வதற்காக இந்த லேண்டர் அனுப்பப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது.