மைக்ரோசாப்ட் நிறுவனம், ஓபன் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தற்போது, மைக்ரோசாப்ட் அவுட்லுக், பவர் பாயிண்ட், எக்ஸெல், வேர்ட் போன்ற செயலிகளில், ஓபன் ஏஐ -ன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புகுத்தப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.
வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், “மைக்ரோசாப்ட் 365 பயனர்கள், விரைவில் செயற்கை நுண்ணறிவால் புதுப்பிக்கப்பட்ட ‘கோ பைலட்’ என்ற புதிய அம்சங்களை பெறுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் எளிமையான மொழியில் கூறும் கட்டளைகளை, கருவிகள் சிறப்பாக நிறைவேற்றித் தரும் என்று கூறப்படுகிறது. அனைவரும், தங்களுக்கு தெரிந்த எளிமையான மொழியில் கட்டளை இட்டு, கோ பைலட் கருவிகளை வேலை வாங்க முடியும். பயனர்களின் கட்டளைக்கேற்ப, படம் வரைவது உள்ளிட்ட பல்வேறு செயல்களை இந்த கருவிகள் சிறப்பாக செய்து முடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ‘கோடிங்’ தெரிந்தவர்கள் மட்டுமே நிபுணத்துவம் வாய்ந்த பணிகளை செய்து முடிக்க முடியும் என்ற நிலை களையப்படுகிறது.