புதினுக்கு எதிராக கைது ஆணை - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

March 18, 2023

உக்ரைன் - ரஷ்யா போரின் போது, போர் குற்றத்தில் ஈடுபட்டதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை வழங்கி உள்ளது. போரின் போது, குழந்தைகள் உட்பட உக்ரைன் மக்களை, ரஷ்யா நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த போர் குற்றத்திற்காக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், புதின் மட்டுமல்லாது, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கும் கைது ஆணை […]

உக்ரைன் - ரஷ்யா போரின் போது, போர் குற்றத்தில் ஈடுபட்டதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணை வழங்கி உள்ளது. போரின் போது, குழந்தைகள் உட்பட உக்ரைன் மக்களை, ரஷ்யா நாடு கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த போர் குற்றத்திற்காக புதின் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நெதர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், புதின் மட்டுமல்லாது, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கும் கைது ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்ய நாடு உறுப்பினராக இல்லை. எனவே, இது குறித்து எந்தவித பதிலும் ரஷ்யா சார்பில் அளிக்கப்படவில்லை. மேலும், இதனை ஒரு பிரச்சினையாக ரஷ்யா கருதவில்லை என்றே கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu