சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விக்டோரியா பொது அரங்கத்தை ரூ.32½ கோடியில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் விக்டோரியா பொது அரங்கம் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டிடம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இங்கிலாந்து பேரரசி விக்டோரியா பெயரால் உருவாக்கப்பட்டது. சென்னை மாநகரின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டான இந்த கட்டிடம் சேதமடைந்து காணப்பட்டது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் விக்டோரியா பொது அரங்க கட்டிடத்தை ரூ.32.62 கோடியில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, இந்த பணியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.