நடப்பு நிதியாண்டில், இந்தியா, 15920 கோடி மதிப்பில் ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். முந்தைய நிதியாண்டில், 12814 அளவில் மட்டுமே ஏற்றுமதி பதிவாகி இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், நடப்பு நிதி ஆண்டில் பாதுகாப்பு துறையில் முக்கிய வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதியில் இது வரலாற்று உச்சம் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், கடந்த 4 நிதி ஆண்டுகளின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை அவர் வெளியிட்டார். மேலும், 2025 ஆம் நிதி ஆண்டில், இந்தியாவில் 175000 மதிப்பில் ராணுவ உபகரணங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், பாதுகாப்புத் துறை ஏற்றுமதி மதிப்பை 35000 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.