தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்கப்படுகிறது.














