தென்கொரியா நாட்டில் எந்தவித வெளிநாட்டு தொடர்புகளும் இல்லாத நபர் ஒருவருக்கு, முதல் முதலாக குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தென் கொரியாவில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே, நாட்டில் உள்ள 5 - 6 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாக இருந்தனர். ஆனால், தற்போது பாதிப்பு கண்டறியப்பட்ட நபருக்கு, வெளிநாட்டு தொடர்புகள் இல்லை. மேலும், அவர் கடந்த மூன்று மாதங்களாக குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் உள்ளார். அத்துடன், மூன்று மாத காலத்தில் எண்ணற்ற மக்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்நிலையில், நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நோய் பாதிப்பு நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.