ட்விட்டர் பதிவுகள் எழுத்து வரம்பு - 10000 ஆக அதிகரிப்பு

April 15, 2023

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்விட்டர் பதிவுகளுக்கான எழுத்து வரம்பை அதிகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ட்விட்டர் எழுத்து பதிவுக்கான வரம்பு 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கமாக, ட்விட்டரில் 280 எழுத்துக்களில் பதிவுகளை இட முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ட்விட்டர் ப்ளூ சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த வரம்பு 4000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, இது 10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து, பதிவு செய்யப்பட்ட ட்விட்டை 30 நிமிடங்களுக்குள் எடிட் […]

ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், ட்விட்டர் பதிவுகளுக்கான எழுத்து வரம்பை அதிகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது ட்விட்டர் எழுத்து பதிவுக்கான வரம்பு 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்கமாக, ட்விட்டரில் 280 எழுத்துக்களில் பதிவுகளை இட முடியும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ட்விட்டர் ப்ளூ சேவை பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த வரம்பு 4000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது, இது 10000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து, பதிவு செய்யப்பட்ட ட்விட்டை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டரில் வேறு சில புதிய அம்சங்கள் வெளிவர உள்ளதாகவும், இதுவும் ட்விட்டர் ப்ளூ வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விரைவில் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு, இந்த புதிய அம்சங்கள் தாமதமாக வெளியாகும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக, ட்விட்டர் ப்ளூ வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர் என்று சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu