மியான்மர்: தேர்தல் முறைகேடுகள் காரணமாக ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

September 2, 2022

மியான்மர் நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்னரில் நடைபெற்ற தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த தேர்தலில், பல முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் […]

மியான்மர் நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மியான்னரில் நடைபெற்ற தேர்தலில், ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த தேர்தலில், பல முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், மின் ஆங் ஹலிங் தன்னை இடைக்கால அரசின் பிரதமராகப் பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர், பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆங் சான் சூகி மீது, பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில், ஊழல் தொடர்பான 4 வழக்குகளில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதில், நீதிபதி மாங்க் மாங்க் கிங், ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். சூகியுடன் இணைந்து, வின் மின்ட் மற்றும் மின் து என்ற இரு தலைவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்தி செயல்பட வைத்ததற்காக, பிரிவு 130 ஏ வின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு வருடமாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், கடந்த தேர்தலில் 2000 இரட்டை ஓட்டுகள் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களை விட கூடுதலாக 75 சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குற்றத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, ஊழல் உள்ளிட்ட முறைகேடு வழக்குகளில் ஆங் சான் சூகிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் முறைகேடு வழக்கிற்காக மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu