கடந்த பிப்ரவரி மாதம், டிஸ்னி நிறுவனம் தனது 7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. தற்போது, மற்றொரு புதிய சுற்று பணி நீக்க நடவடிக்கையில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த முறை, பொழுதுபோக்கு துறையில் பணியாற்றி வரும் 15% பணியாளர்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி இழக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
தொலைக்காட்சி, திரைப்படம், தீம் பார்க் போன்றவற்றில் பணியாற்றி வரும் ஊழியர்கள் இதனால் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் 24ம் தேதிக்குள், குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த தகவல் வெளியாகும் என கருதப்படுகிறது. செலவினங்களைக் குறைக்கும் நடவடிக்கையாகவே இந்த பணி நீக்கம் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.