தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது இலங்கை நாட்டு செயல்பாடுகளை, டயலொக் அக்சியட்டா நிறுவனத்துடன் இணைக்க திட்டமிட்டு இருந்தது. தற்போது, இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், ஏர்டெல் நிறுவனத்தின் சார்பாக, அதன் துணை நிறுவனமான பார்தி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிடெட் கையெழுத்திட்டுள்ளது. அதைப்போலவே, அக்சியட்டா குரூப் பெர்ஹாட்டின் துணை நிறுவனமான டயலொக் அக்சியட்டா, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து, ஏர்டெல் நிறுவனம் தனது ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பான செயல்பாடுகள் நிறைவடைந்த பின்னர், ஏர்டெல் டயலொக்கின் புதிய பங்குகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.