பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் காலில் மீண்டும் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக அவரது கட்சியினர் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கான கடந்த நவம்பர் மாதம் நடந்த துப்பாக்கி சூட்டில் காலில் காயம் அடைந்தார். பின்னர் குணமடைந்து வந்த அவர், தன் மீதுள்ள வழக்கு களுக்காக கோட்டுகளில் நேரில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு தொடர்பாக அவர் லாகூர் உயர்நீதி மன்றத்தில் ஆஜராக சக்கர நாற்காலியில் வந்தார். அப்போது அங்கு நின்ற கூட்டத்தினர் அவரை நெருக்கித் தள்ளியதில் மீண்டும் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக அவரது கட்சியினர் நேற்று குற்றம் சாட்டினர். மேலும் பாதுகாப்பு குறைபாடு காரணமாகவே இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
இதையடுத்து இம்ரான்கான் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் ஒரு மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் "இம்ரான் கானுக்கு எதிராக 3-வது படுகொலை முயற்சி நடந்துள்ளது. எனவே பொது வெளிப்பாட்டைத் தவிர்ப்பதற்காக இம்ரான் கானுக்கு எதிரான அரசியல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.