பிரபல தொழில்நுட்ப நிறுவனமான காக்னிசன்ட், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரவிக்குமார், செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், 11 மில்லியன் சதுர அடி அலுவலக இடத்தை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதன் மூலம், நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் சேமிப்பு உருவாகும் என்று கூறியுள்ளார்.
மேலும், நிகழாண்டில், காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் சரிய கூடும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதனை ஈடுகட்டவே செலவுகளை குறைக்கும் நடவடிக்கையில் களமிறங்கி உள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன், சந்தை நிலவரப்படி மிகக் குறைந்த மார்ஜின் அளவான 14.6% ஐ காக்னிசன்ட் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தில் இருந்து 3500 ஊழியர்கள் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர்களில் எத்தனை பேர் இந்தியாவில் பணியாற்றுபவர்களாக இருப்பர் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.