இமாச்சலில் வழக்கத்தை விட மே மாதத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் இரு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட 14 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. லஹால் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் 6 சாலைகளும், குல்லு பகுதியில் 4 சாலைகளும் மூடப்பட்டுள்ளன. மணாலியில் ரோந்தன் கணவாய் பகுதியில் செல்லும் அடர் சுரங்கப்பாதைக்கு அருகில் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பனியில் சிக்கின. பனியில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் பகல் நேர வெப்ப அளவு வழக்கத்தைவிட 12 டிகிரி செல்ஸியஸ் குறைவாக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.