ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவிலும் இயங்கி வருகிறது. இங்கு இயங்கி வரும் நிறுவனத்தின் ஆலைகள் மூலம், மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் 8000 கோடி ரூபாய் முதலீட்டில், மின்னணு சாதன தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றை அமைக்க நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தொழிற்சாலைக்காக, தேவனஹள்ளி பகுதியில் 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 300 கோடி என சொல்லப்பட்டுள்ளது.