கடந்த சில ஆண்டுகளாக, செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகள் மற்றும் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி, பிரபல வேலைவாய்ப்பு தளமான இன்டீட், செயற்கை நுண்ணறிவு பிரிவில் 158% வேலை வாய்ப்புகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கையும் 89% உயர்வை பதிவு செய்துள்ளதாக இன்டீட் தெரிவித்துள்ளது. மேலும், இது கடந்த 5 ஆண்டுகளுக்கான நிலைமை என கூறியுள்ளது.
பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணியிடங்களுக்கான தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதேபோல், செயற்கை நுண்ணறிவு பணியிடங்களில் பணி செய்வதற்கு தகுதியான தொழில்நுட்ப பணியாளர்களும் இந்தியாவில் அதிகமாக காணப்படுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கருத்துக் கணிப்பின்படி சிங்கப்பூரில் 94.7% செயற்கை நுண்ணறிவு பணியிடங்கள் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.