இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபி சந்திப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ளார். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பசிபிக் பிராந்திய நாடான பப்புவா நியூ கினியாவுக்கு அவர் சென்றுள்ளார். இது ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள தீவு நாடாகும். அங்கு, அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பில், இந்தியா மற்றும் இந்திய பிரதமருக்கு, ஜேம்ஸ் மராபி, மிகுந்த மரியாதை மற்றும் வரவேற்பை அளித்துள்ளார். குறிப்பாக, விமான நிலையத்தில், பிரதமர் மோடியின் காலைத் தொட்டு […]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ளார். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, பசிபிக் பிராந்திய நாடான பப்புவா நியூ கினியாவுக்கு அவர் சென்றுள்ளார். இது ஆஸ்திரேலியாவை ஒட்டியுள்ள தீவு நாடாகும். அங்கு, அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராபியை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பில், இந்தியா மற்றும் இந்திய பிரதமருக்கு, ஜேம்ஸ் மராபி, மிகுந்த மரியாதை மற்றும் வரவேற்பை அளித்துள்ளார். குறிப்பாக, விமான நிலையத்தில், பிரதமர் மோடியின் காலைத் தொட்டு அவர் ஆசீர்வாதம் பெற்றது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது.

தொடர்ந்து, இந்தியா - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மராபி, "தெற்குலகின் குரலாக இந்தியா உள்ளது. இந்தியாவின் தலைமையை ஏற்று பப்புவா நியூ கினியா பின் தொடரும்" என்று கூறியுள்ளார். மேலும், "உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக, எங்கள் நாட்டின் இறக்குமதி செலவு உயர்ந்துள்ளது. அதிக விலை கொடுத்து எரிபொருள் மற்றும் மின்சாரத்தை பெறும் நிலையில் உள்ளோம். அத்துடன், உலக அரசியல் மற்றும் சர்வாதிகார போட்டியால் எங்கள் நாடு மிகுந்த பாதிப்படைந்துள்ளது. எங்களைப் போன்ற சிறிய நாடுகளின் வலிமையான குரலாக இந்தியா ஒலிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்காக பசிபிக் பிராந்திய சிறிய நாடுகள் பயன்படுத்தப்பட்டு கொள்வதாக வருத்தம் தெரிவித்த அவர், சர்வதேச அரங்கில் இது தொடர்பாக இந்தியா வாதாட வேண்டும் என வலியுறுத்தினார். இதன் மூலம், பசிபிக் நாடுகள் மற்றும் இந்தியா இடையிலான உறவு வலுவடையும் என கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu