மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்

September 7, 2022

மேட்டூர் அணையிலிருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் திறப்பால் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்குட்பட்ட கந்தப்பட்டறை, கீரைக்காரர் தெரு, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதில் தங்கியிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதமும் இதேபோல் இரண்டு […]

மேட்டூர் அணையிலிருந்து 1.25 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பவானி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த தண்ணீர் திறப்பால் ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்குட்பட்ட கந்தப்பட்டறை, கீரைக்காரர் தெரு, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதில் தங்கியிருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதமும் இதேபோல் இரண்டு முறை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தற்போது 3-வது முறையாக வெள்ள பேருக்கு ஏற்பட்டு வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu