இந்திய மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் - அரசுக்கு ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். அதன் பொருட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒரு மாத காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த மே 28 ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பேரணியாக நுழைந்தனர். காவலை […]

இந்திய மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவரும் பாஜக எம்பியும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். அதன் பொருட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஒரு மாத காலமாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், கடந்த மே 28 ஆம் தேதி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின் போது, அவர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் பேரணியாக நுழைந்தனர். காவலை மீறி அவர்கள் நுழைந்ததால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, நேற்று, அவர்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் வீச உள்ளதாக அறிவித்தனர். இறுதியில், விவசாயிகள் சங்கத் தலைவரின் வேண்டுகோளை ஏற்று, பதக்கங்களை வீசும் போராட்டம் 5 நாட்கள் தாமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான போராட்டக் களமும் பறிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் மோசமாக நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு, அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அறவழியில் நீதி கேட்டு போராடும் வீரர்கள் மோசமாக நடத்தப்படுவதாக கவலை தெரிவித்துள்ளது. மேலும், “திட்டமிட்டபடி, 45 நாட்கள் கெடுவுக்குள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால், இந்தியாவின் அமைப்பு நீக்கப்படும். அதன் பின்னர், இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் தனி கொடியின் கீழ் விளையாட அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu