அக்னி ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில், ‘அக்னி ப்ரைம்’ என்ற ஏவுகணையை டிஆர்டிஓ வடிவமைத்திருந்தது. இந்த ஏவுகணை, ஏற்கனவே 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பரிசோதனை முயற்சியிலும், இந்த ஏவுகணை, குறிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம், முதல் முறையாக இரவு நேர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்ட இரவு நேர சோதனையின் போது, […]

அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில், ‘அக்னி ப்ரைம்’ என்ற ஏவுகணையை டிஆர்டிஓ வடிவமைத்திருந்தது. இந்த ஏவுகணை, ஏற்கனவே 3 முறை பரிசோதனை செய்யப்பட்டது. ஒவ்வொரு பரிசோதனை முயற்சியிலும், இந்த ஏவுகணை, குறிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த ஏவுகணையின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம், முதல் முறையாக இரவு நேர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நடத்தப்பட்ட இரவு நேர சோதனையின் போது, திட்டமிடப்பட்ட இலக்கு துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டது.

அக்னி ப்ரைம் ஏவுகணை, 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தி படைத்ததாக சொல்லப்பட்டுள்ளது. அத்துடன், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் எடை, முந்தைய அக்னி 3 ஏவுகணையின் எடையை விட 50% குறைவாகும். மேலும், ரயில்கள், சாலைகள் ஆகியவற்றிலிருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும். இந்தியாவின் எந்த பகுதிக்கும், எளிதாகவும், உடனடியாகவும் கொண்டு செல்ல முடியும். இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதால், இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu