வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து கிம் ரகசிய உத்தரவு 

June 9, 2023

வட கொரிய அதிபர் நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது. இது குறித்து தென் கொரியா உளவுத்துறை கூறுகையில் “மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40% அதிகரித்துள்ளது. வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் பட்டினிச்சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் வட […]

வட கொரிய அதிபர் நாட்டில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.

இது குறித்து தென் கொரியா உளவுத்துறை கூறுகையில் “மோசமான பொருளாதாரச் சூழல் காரணமாக வட கொரியாவில் தற்கொலைகள் 40% அதிகரித்துள்ளது. வட கொரியாவின் கோங்ஜின் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டில் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு வட கொரியாவில் பட்டினிச்சாவுகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கி உள்ளது.

அந்த வகையில் தற்கொலை தேசத் துரோகம் என்று கூறி அதிபர் கிம், அதனைத் தடுக்க ரகசிய உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார். மேலும், தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அரசாங்கங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. இதற்கு முன் வட கொரியா குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுவதாக தென்கொரியா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu