குஜராத் மாநிலத்தில் உள்ள தாஹிஜ் மற்றும் சில்வாசா பகுதிகளில் சுபாலக்ஷ்மி பாலிஎஸ்டர்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களின் மூலம் ஒரு ஆண்டுக்கு 2,52,000 மில்லியன் டன் அளவிலான பாலிஎஸ்டர்ஸ் பைபர்கள்,சிப்புகள் மற்றும் நூல்கள் ஆகியவை தயார் செய்யப்படுகின்றன. சுபாலக்ஷ்மி பாலிஎஸ்டர்ஸ் லிமிடெட் மற்றும் சுபாலக்ஷ்மி பாலி டெக்ஸ் லிமிடெட் என்று இரு பிரிவாக இந்த குழுமம் இயங்கி வருகிறது. சுபாலக்ஷ்மி பாலிஎஸ்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் டர்ன் ஓவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் 1768.39 கோடி ரூபாயாக இருந்தது. அதே ஆண்டில், சுபாலக்ஷ்மி பாலிடெக்ஸ் நிறுவனத்தின் டர்ன் ஓவர் 267.40 கோடி ரூபாயாக இருந்தது.
இந்நிலையில், பாலிஸ்டர் துறையில் வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த இரு நிறுவனங்களையும் கையகப்படுத்தி உள்ளது. சுபாலக்ஷ்மி பாலிஎஸ்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தை 1522 கோடி ரூபாய்க்கும், சுபாலக்ஷ்மி பாலிடெக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை 70 கோடி ரூபாய்க்கும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த கையகப்படுத்துதல் காம்படிஷன் கமிஷன் ஆப் இந்தியாவின் (CCI) ஒப்புதலுடன் நடைபெற்றுள்ளது.