ஒடிசா மாநிலத்தின் தனியார் செய்தி தொலைக்காட்சி சேனலாக ஓடிவி (OTV) அறியப்படுகிறது. இந்த சேனலில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். லிசா என்று பெயரிடப்பட்டுள்ள இவர், தொலைக்காட்சி வரலாற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய வரவாக அமைந்துள்ளார். நேற்று புவனேஸ்வரரின் நடைபெற்ற விழாவில் லிசா அறிமுகம் செய்யப்பட்டார். ஒடிசாவின் பாரம்பரிய கைத்தறி புடவையில், ஒடியா மற்றும் ஆங்கில மொழிகளில் செய்திகளை வழங்குமாறு இந்த செயற்கை நுண்ணறிவு தொகுப்பாளர் வடிவமைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய ஓ டிவி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாகி மங்கத் பாண்டா, “தொலைக்காட்சி ஊடகத்தில் இது சமீபத்திய சாதனை. ஒடிசாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்ததில் மிக்க மகிழ்ச்சி. செயற்கை நுண்ணறிவு மூலம் எங்கள் பணிகள் விரைவாக நடைபெறும். அத்துடன், திரும்பத் திரும்ப நடத்தப்படும் பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகுந்த துணையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.