குஜராத்தில் 3 மாநிலங்களவை இடங்களில் போட்டியிட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
கோவா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் எம்.பி -களின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜூலை மாதம் 24 ஆம் தேதி தேர்தல் நடத்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீண்டும் குஜராத்தில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல், மாநில பா.ஜனதா தலைவர் சி.ஆர்.பட்டீல் ஆகியோரும் சட்டசபை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் ஜெய்சங்கர் வேட்புமனுவை அளித்தார்.
மேலும் மாநிலங்களவைக்கு குஜராத்தில் இருந்து போட்டியிட வாய்ப்பு அளித்தமைக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தலைமை மற்றும் குஜராத் மக்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.