ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முக்கிய ஆதரவாளரான அஜய் சிங், கிட்டத்தட்ட 500 கோடி ரூபாயை, விமான நிறுவன பணிகளில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த முதலீடு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அஜய் சிங் வழங்க உள்ள இந்த முதலீட்டுத் தொகை மூலம், அவசர கால கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு 206 கோடி ரூபாய் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இது விமான நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி பணிகளுக்கு மிகவும் துணைபுரிவதாக அமையும் என்று அஜய் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.