மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக, வரும் 2024 ம் ஆண்டு தேர்தலில் களமிறங்க எதிர்க்கட்சிகள் கைகோர்த்துள்ளன. அதை முன்னிட்டு, ஏற்கனவே பாட்னாவில் எதிர்க்கட்சிகள் மாநாடு நடைபெற்றது. தற்போது, பெங்களூருவில் இரண்டாம் கட்ட கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘ஐக்கிய முற்போக்கு கூட்டணி’ என்ற பெயரை மாற்றி, ‘இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஆங்கில விரிவாக்கம் Indian National Democratic Inclusive Alliance என்பதாகும். அதன்படி, இந்த பெயரின் சுருக்கம் இந்தியா (INDIA) என்பதாக ஆங்கிலத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டத்தில், முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளும் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்று உள்ளதால், இந்த கூட்டம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது.