பிரிட்டனில் சட்ட விரோதமாக நுழைவதை தடுக்க புதிய சட்டம்

July 19, 2023

பிரிட்டன் பாராளுமன்றத்தின் மேல்சபை "சட்டவிரோத குடியேற்ற மசோதா" சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது. பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேல்சபை "சட்டவிரோத குடியேற்ற மசோதா" இனி சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது. இந்த மசோதாவின்படி படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும். இந்த மசோதா மன்னரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது. […]

பிரிட்டன் பாராளுமன்றத்தின் மேல்சபை "சட்டவிரோத குடியேற்ற மசோதா" சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது.

பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேல்சபை "சட்டவிரோத குடியேற்ற மசோதா" இனி சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது. இந்த மசோதாவின்படி படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும். இந்த மசோதா மன்னரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக்கப்பட உள்ளது.

இவ்வாறு சட்ட விரோதமாக வருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். 2022 ஆம் ஆண்டில் 45,000க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர், தென்கிழக்கு பிரிட்டனின் கரைகளில் சிறிய படகுகளில் வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் புலம் பெயர்வோர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu