கண்டார் ப்ரண்ட்ஸ் நிறுவனம் டாப் 75 மிக மதிப்புமிக்க இந்திய பிராண்டுகள் 2022 ன் அறிக்கையை வெளியிட்டது. அதில் டி சி எஸ் மென்பொருள் நிறுவனம் எச் டி எப் சி யை பின்னுக்குத் தள்ளி 45,519 மில்லியன் டாலர்கள் மதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கண்டார் ப்ரண்ட்ஸ் -ன் இந்தியா தரவரிசையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) முதலிடத்தில் உள்ளது. டி சி எஸ்-இன் பிராண்ட் மதிப்பு 2020ல் இருந்து 2022 இல் 212% உயர்ந்துள்ளது. இந்த ஜூன் காலாண்டில் டி சி எஸ் ஆண்டுக்கு ஆண்டு 5.2% நிகர லாபம் மற்றும் வருவாயில் 16% உயர்வை பதிவு செய்துள்ளது. 2014 இல் கண்டார் ப்ரண்ட்ஸ் இந்தியா தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எச் டி எப் சி வங்கி முதலிடத்தை வகித்தது. ஆனால் தற்போது ஐடி பெஹிமோத் தரவரிசையில் இரண்டு இடங்கள் உயர்ந்து எச் டி எப் சி யை 2வது இடத்திற்குத் தள்ளியது. அதேபோல் கண்டார் ப்ரண்ட்ஸ் 2022 இல் உலகளாவிய பிராண்டுகள் தரவரிசையில் சாம்சங்கிற்குப் பின் டிசிஎஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பிராண்டுகள் வளர்ந்து வரும் இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் உள்நாட்டு தேவைகள் மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன என்று ஒ௫ அறிக்கை கூறுகிறது. இவற்றால் நாட்டின் ஏற்றுமதிகள் 17.2% அதிகரித்து அதன்மூலம் $178 பில்லியன் வருவாய் ஈட்டப்படுகிறது. 2022 நிதியாண்டில் இந்தியாவின் தொழில்நுட்பத் துறை $200 பில்லியன் வருவாயைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.