பாகிஸ்தானின் இடைக்கால பிரதம மந்திரி அன்வார்-உல்-ஹக் கக்கர் தலைமையின் கீழ் காபந்து அமைச்சரவை நேற்று பதவி ஏற்றது.
முன்னதாக அன்வார்-உல்-ஹக் கக்கர் கடந்த திங்களன்று பாகிஸ்தானின் காபந்து பிரதமராக பதவி ஏற்றார். இந்த அமைச்சரவையில் முன்னாள் மத்திய வங்கி தலைவர் சம்சத் அக்தார் நிதி அமைச்சராகவும், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஜலில் அப்பாஸ் ஜிலானி வெளியுறவு துறை அமைச்சராகவும், தகவல் துறை அமைச்சர் சாலங்கியும் உள்ளனர்.புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை இவர் பாகிஸ்தானை வழி நடத்துவார். புதிய பிரதமரின் முக்கிய பொறுப்பு பாகிஸ்தானில் பொருளாதார ஸ்திரத்தின்மையை உருவாக்க உருவாக்குவது தான். நாடு திவால் ஆகும் நிலையில் மூன்று பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பிணையெடுப்பு ஒப்பந்தத்தை பெற்றது.
தொகுதி எல்லைகள் மீண்டும் வரையப்பட உள்ளதால் நவம்பர் மாதத்திற்கு பிறகு தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய தொகுதிகள் டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்தது. அதன் பிறகு தேர்தல் தேதியை ஆணையம் உறுதி செய்யும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட 90 நாட்களுக்குள் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று சட்டம் கூறிய போதிலும் பிப்ரவரி மாதம் வரை தேர்தல்கள் தள்ளி போகலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.