தெலுங்கானாவில் இன்று அதிகாலை 4.43 மணியளவில் வாரங்கல் பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலுக்கு கிழக்கே சுமார் 127 கிலோமீட்டர் தொலைவில் 30 கிலோமீட்டர் அளவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.6 என பதிவாகியுள்ளது. இது லேசான அளவில் பதிவாகியுள்ளதால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. மக்கள் இந்த நிகழ்வின் காரணமாக பீதி அடைந்துள்ளனர். மேலும் மக்களுக்கு நிலநடுக்கத்தின் போது யாரும் கட்டிடத்தை விட்டு வெளியே வர வேண்டாம். வீட்டிற்குள் இருக்கும் கண்ணாடி பொருட்கள், பலகைகள், ஜன்னல்கள் அருகில் இருக்க வேண்டாம். வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் அனைத்தையும் விடுவிக்க வேண்டும். மெழுகுவர்த்திகள் தீப்பெட்டிகள் ஆகியவற்றை அணைக்க வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.