இணைய வழி மளிகை பொருள் விற்பனை தளமான ஜெப்டோ, 2023 ஆம் ஆண்டின் முதல் யூனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதன் மூலம், யூனிகார்ன் பட்டியலில் ஜெப்டோ இணைந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த மதிப்பு 1.4 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டெப் ஸ்டோன் குழுமத்தின் முதலீடுகள், ஜெப்டோ நிறுவனத்தின் நிதி திரட்டலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஸ்டெப் ஸ்டோன் குழுமம், இந்திய நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். இது தவிர, கலிபோர்னியாவை சேர்ந்த குட் வாட்டர் கேப்பிட்டல் நிறுவனம், மற்றும் நெக்ஸஸ் வென்ச்சர் பார்ட்னர்ஸ், கிலேட் புரூக் கேப்பிட்டல், லாச்சி க்ரூம் போன்ற பல நிறுவனங்களும் ஜெப்டோவில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு, தொடங்கப்பட்ட ஜெப்டோ நிறுவனம், குறுகிய காலத்தில் மிக முக்கிய உயர்வை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.